பல்லடம் அருகே கள்ளகிணறு பகுதியில் சாலையில் கவிழ்ந்த முட்டை வேன் - ரூ.2 லட்சம் மதிப்பிலான முட்டை சேதம்

கள்ளகிணறு என்ற பகுதியில் அரசுப்பேருந்தை முந்திச் செல்ல முயன்ற வேன், சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் வேனில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதமடைந்தன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாராபுரம் சாலையில் உள்ள கள்ளகிணறு என்ற பகுதியில் பல்லடத்தை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த முட்டை வேன், அரசு பேருந்து வாகனத்தை முந்தும் போது விபத்து ஏற்பட்டு நடுரோட்டில் முட்டை வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான முட்டைகள் சேதம் அடைந்தன.

அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் மற்றும் அரசு பேருந்தில் வந்த பயணிகள் உயிர் தப்பினர்.



ராஜபாளையத்திலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, அதன் முன்னால் தாராபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கேட்சரிஸ் வேன் ஒன்றன்பின் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து இந்த வேனை முந்த முயற்சித்துள்ளது.



அப்போது வேனின் ஓட்டுநர் கட் அடித்ததாகவும் இதனால் நடுரோட்டில் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பல்லடம் போலீசார் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வாகனத்தை மீட்டனர்.



இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...