பக்ரீத் விடுமுறை நாளில் உக்கடம் புதிய மேம்பாலத்தில் ஒரு பைக்கில் பயணித்த 4 சிறுவர்கள் விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளனர்.
கோவை: பக்ரீத் விடுமுறை தினமான இன்று ஜூன்.17 குறிச்சி பிரிவு இட்டேரி பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் ஒரே பைக்கில், உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டனர். அவர்கள் மேம்பாலத்தில் வாகனத்தில் வலம் வந்தபோது, பக்கவாட்டு தடுப்புச்சுவரில் மோதி, கீழே விழுந்தனர்.
இதில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர். இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் தற்போது மேம்பாலத்தில் யாரும் ஏற முடியாத வகையில் தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.