மதுக்கரை தாலுகாவில் மக்களின் குறைகளை கேட்க கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் செல்கிறார்

கோவை மாவட்டம், மதுக்கரை தாலுகாவில் மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் நோக்கில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி 19 ஜூன் 2024 அன்று மற்றும் அன்று மாலை நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.


கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை தாலுகாவில் உள்ள மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு நிவர்த்தி செய்ய, வரும் ஜூன் 19 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அங்கு நேரில் அதிகாரிகளுடன் செல்கிறார்.

முதல் கட்டமாக 19 ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை வெவ்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெறுவார்கள்.இதே போல மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார். 

இதனால் மதுக்கரை தாலுகாவில் உள்ள 20 கிராமங்கள் பயனடைய உள்ளது. உங்களை தேடி உங்கள் ஊரில் எனும் அரசு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தாலுகாவில் ஆட்சியர் தங்கி மக்களின் குறைகளை கேட்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மதுக்கரையில் 19.6.2024 காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ஆட்சியர் அங்கு தங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...