மாநகராட்சி பணிகள் குறித்து கோவை மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 17-வது வார்டுக்குட்பட்ட ஓணாப்பாளையம், வடவள்ளி பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, வடவள்ளி பகுதியில் பயன்பாட்டில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி, பொன் நகர் பகுதியில் உள்ள ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பூங்கா, வடவள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி மயாண இடம் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, 18-வது வார்டுக்குட்பட்ட வீரகேரளம், ரவீஸ் அவென்யூ பகுதியில் மீட்கப்பட்ட மாநகராட்சிப் பொது ஒதுக்கீட்டு இடத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டதையும், ஐஓபி காலனியிலிருந்து மருதமலை பிரதான சாலையை இணைக்கும் வகையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் இணைப்புப் பாலத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும தனி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.



இதைத்தொடர்ந்து, வடவள்ளியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டார்.



இந்நிகழ்வுகளின் போது, துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் ராமைய்யா, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...