தாராபுரத்தில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் 127வது அரங்கேற்றம் விழா - கும்மியாட்டம் ஆடி கலைஞர்கள் அசத்தல்

முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் மற்றும் தத்துவ பாடல்கள் உள்ளிட்ட பாடல்கள், பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் அரங்கேற்ற விழாவில் இடம்பெற்றன. இந்த கும்மியாட்டத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முத்து நகர் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழு சார்பில் 127-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில், இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலைக்குழுவின் ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் கலைஞர்கள் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான பவளக்கொடி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடை அணிந்து ஆடினர். இதில் சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என 200 பேர் கலந்துகொண்டனர்.



முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்படம், தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் விழாவில் இடம்பெற்றன. இந்த கும்மியாட்டத்தை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...