உயிரிழப்பில் சந்தேகம் எனக்கூறிய மருத்துவர்களுக்கு எதிர்ப்பு - பல்லடம் அரசு மருத்துவமனை முற்றுகை

பனப்பாளையத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி திருப்பூர் மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைக்க பல்லடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருப்பூர் சாலை பனப்பாளையம் பகுதியில், தொட்டிபாளையம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்த போது கீழே விழுந்து காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது உயிரிழப்பு சந்தேகத்தின் அடிப்படையில் இருப்பதாக பல்லடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள், பல்லடம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.



இதனால் மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்லடம் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, விசாரணையின் அடிப்படையில் வழக்குகள் மாறும், ஆகவே விசாரணை உரிய முறையில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து, அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தார். அதனை தொடர்ந்து போராட்டத்திற்கு வந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...