மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மேயரிடம் பொதுமக்கள் அளித்தனர்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று (18.06.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 30 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 4 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 7 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 1 மனுவும், தெற்கு மண்டலத்தில் 10 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 9 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 3 மனுக்களும் ஆகமொத்தம் 30 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுவின் அடிப்படையில் தெற்கு மண்டலம் வார்டு எண்.85க்குட்பட்ட பொள்ளாச்சி பிரதான சாலை, குறிச்சி, வெங்கடாசலபதி நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைப்பது தொடர்பாக மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாக்கடை கட்டுமானப்பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலருக்கு அறிவுறுத்தினர்.

இக்கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 30 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 4 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 7 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 1 மனுவும், தெற்கு மண்டலத்தில் 10 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 9 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 3 மனுக்களும் ஆகமொத்தம் 30 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுவின் அடிப்படையில் தெற்கு மண்டலம் வார்டு எண்.85க்குட்பட்ட பொள்ளாச்சி பிரதான சாலை, குறிச்சி, வெங்கடாசலபதி நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைப்பது தொடர்பாக மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாக்கடை கட்டுமானப்பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலருக்கு அறிவுறுத்தினர்.