கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உறவினர்கள் இடையே நடந்த தகராறில் ஒருவர் கொலை..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில், குடிபோதையில் மருதமுத்து என்பவரை அவரது உடன்பிறந்த அண்ணன் விஜய் மற்றும் நண்பர் குமரேசன் இருவரும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில்மருதமுத்து என்பவரை அவரது உடன்பிறந்த அண்ணன் விஜி மற்றும் குமரேசன் ஆகிய இருவரும் குடிபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் 41 வயதான மருதமுத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டு எதிரில் உள்ள இவரது அண்ணன் விஜய்யின் மனைவி சித்ரா என்பவரிடம் வெளியில் பொதுவாக உள்ள பாத்ரூம் யாரும் யூஸ் பண்ண கூடாது என்று குடிபோதையில் திட்டி உள்ளார்.

பின்னர் தனது வீட்டின் முன்பு மருதமுத்து உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தபோது எதிரில் உள்ள அவரது அண்ணன் மனைவி சித்ரா வாசல் கூட்டியபோது அவரது சாப்பாட்டில் மண் விழுந்ததால் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அவரது அண்ணன் மகன் ரோஷன் என்பவரை மருதமுத்து கட்டையால் அடித்தும் உள்ளார்.

இதையடுத்து மருதமுத்துவின் அம்மா லட்சுமி தனது பெரிய மகன் விஜய்க்கு போன் மூலம் தகவல் சொன்னதின் பெயரில் குடிபோதையில் ஆட்டோவில் வந்த விஜய் மற்றும் அவரது நண்பர் குமரேசன் ஆகிய இருவரும் சேர்ந்து மருதமுத்து வீட்டினுள் சென்று கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் மருதமுத்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தகவல் அறிந்து பெரியநாயக்கன்பாளையம் ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து வருகிறார். தப்பி ஓடிய விஜய் மற்றும் குமரேசன் ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...