பல்லடம் அருகே இடுவாய் பகுதியில் மளிகை கடையில் திருட்டு – காவல்துறை விசாரணை

இடுவாய் பகுதியில் உள்ள வஞ்சிபாளையம் பிரிவில் ராஜா என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் பகுதியில் உள்ள வஞ்சிபாளையம் பிரிவில் தனியார் மளிகை கடை ஒன்றில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

வழக்கம் போல 17ஆம் தேதி இரவு 10 மணியளவில் கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு ராஜா சென்ற நிலையில், நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.



உள்ளே சென்று பார்த்தப்போது, கல்லாப்பெட்டியில் இருந்த பணம் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை யினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் சுமார் ரூ.30,000பணம் திருடு போனது விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...