இடுவாய் பகுதியில் உள்ள வஞ்சிபாளையம் பிரிவில் ராஜா என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் பகுதியில் உள்ள வஞ்சிபாளையம் பிரிவில் தனியார் மளிகை கடை ஒன்றில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
வழக்கம் போல 17ஆம் தேதி இரவு 10 மணியளவில் கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு ராஜா சென்ற நிலையில், நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தப்போது, கல்லாப்பெட்டியில் இருந்த பணம் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை யினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் சுமார் ரூ.30,000பணம் திருடு போனது விசாரணையில் தெரியவந்தது.
வழக்கம் போல 17ஆம் தேதி இரவு 10 மணியளவில் கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு ராஜா சென்ற நிலையில், நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தப்போது, கல்லாப்பெட்டியில் இருந்த பணம் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை யினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் சுமார் ரூ.30,000பணம் திருடு போனது விசாரணையில் தெரியவந்தது.