கோவையில் 197 ஊராட்சிகள் திறந்தவெளி கழிப்பறையற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி முகமை தகவல்

கோவை மாவட்டம் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக 2016-17 ஆம் ஆண்டு அறிவிக்க தேர்ந்தெடுக்கப்பட்டு  இவ்வாண்டின் குறியீடான 56615 கழிப்பறைகளில் இதுவரை 47344 வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 



மொத்தமுள்ள 228 ஊராட்சிகளில் 197 ஊராட்சிகள் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் மற்றும குட்டி கமாண்டோ படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்ட 197 ஊராட்சிகளிலும் குட்டி கமாண்டோ படையினர் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மீதமுள்ள 31 ஊராட்சிகளில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சுகாதார ஊக்குவிப்பாளர்கள், குட்டி கமாண்டோ படையினர் ஆகியோரின் தொடர்ச்சியான சுகாதார விழிப்பணர்வு நடவடிக்கைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்புடன் மீதமுள்ள பணிகள் நிறைவு செய்யப்பட்டு 14.4.2017 அன்று சிறப்பு கிராம சபா மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட உள்ளது.

அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக மாற்றப்பட உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...