கோவை மாவட்டம் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக 2016-17 ஆம் ஆண்டு அறிவிக்க தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வாண்டின் குறியீடான 56615 கழிப்பறைகளில் இதுவரை 47344 வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 228 ஊராட்சிகளில் 197 ஊராட்சிகள் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் மற்றும குட்டி கமாண்டோ படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்ட 197 ஊராட்சிகளிலும் குட்டி கமாண்டோ படையினர் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீதமுள்ள 31 ஊராட்சிகளில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சுகாதார ஊக்குவிப்பாளர்கள், குட்டி கமாண்டோ படையினர் ஆகியோரின் தொடர்ச்சியான சுகாதார விழிப்பணர்வு நடவடிக்கைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்புடன் மீதமுள்ள பணிகள் நிறைவு செய்யப்பட்டு 14.4.2017 அன்று சிறப்பு கிராம சபா மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட உள்ளது.
அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக மாற்றப்பட உள்ளது.

மொத்தமுள்ள 228 ஊராட்சிகளில் 197 ஊராட்சிகள் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் மற்றும குட்டி கமாண்டோ படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்ட 197 ஊராட்சிகளிலும் குட்டி கமாண்டோ படையினர் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீதமுள்ள 31 ஊராட்சிகளில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சுகாதார ஊக்குவிப்பாளர்கள், குட்டி கமாண்டோ படையினர் ஆகியோரின் தொடர்ச்சியான சுகாதார விழிப்பணர்வு நடவடிக்கைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்புடன் மீதமுள்ள பணிகள் நிறைவு செய்யப்பட்டு 14.4.2017 அன்று சிறப்பு கிராம சபா மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட உள்ளது.
அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக மாற்றப்பட உள்ளது.