சவுரிபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்- கைது

கோவை மாவட்டம் சவுரிபாளையம்  அருகே உள்ள தேர்வீதி பகுதியில் 1653 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

மேலும், கோவை மாநகரத்தில் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் அகற்றியதால் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுக்கடைக்கு ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

எனவே. மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் எனக்கோரி இன்று அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, தேர்வீதி பகுதி மக்களின் டாஸ்மாக் கடை எண் 1653 முற்றுகை போராட்டத்தால் 12 மணிக்கு திறக்கப்படவேண்டிய கடை தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...