திருப்பூர் அருகே பல்லடம் பகுதியில் அருள்புரம் பகுதியில் விளையாடும்போது 7 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Coimbatore:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் 7 வயதான சஞ்சய் என்னும் சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்த போது தவறுதலாக தண்ணீர் நிரம்பிய கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றின் பாதுகாப்பின்மை காரணமாக இப்படி ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கிணற்றை மூடுவதற்கும் கம்பி வேலிகள் அமைத்து அதனை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், அவர்கள் திருப்பூர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக பஞ்சாயத்து தலைவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.