சித்திரை முதல் நாள் எப்படி தமிழ் புத்தாண்டானது?


மாதங்களில் முதன்மையானது சித்திரை, நெடுங்காலம் தொட்டு இந்த மாதத்தின் முதல் நாளை தமிழர்கள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.



இந்நன்நாளில், முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் ஆபரணங்கள், செல்வங்கள் முதலானவற்றை தங்கள் இஷ்ட தெய்வத்தின் முன் வைத்து, காலை எழுந்தவுடன் அவற்றில் விழித்து புது வருடத்தை பக்தியுடனும், ரசனையுடனும்  தொடங்குகின்றனர் தமிழ் மக்கள். 



தமிழர்கள் சித்திரை முதல் நாளை புத்தாண்டாக ஏற்றுக்கொண்டதற்கு பின் அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளது. சூரியனை மையமாக வைத்து பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப்  பாதையினை தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.

அவை வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என 12 பாகங்களாகும். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன. சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது. 

ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள்.

அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினார்கள். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி நட்சத்திரம் மேஷ ராசியில் தொடங்குவதால் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிபடுகிறது. இவ்வாறாக அறிவியல் ரீதியாக கொண்டாடப்படும் தினம் தான் தமிழ் புத்தாண்டு. 



நாளை கொண்டாடப்படவுள்ள தமிழர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவை பூமார்க்கெட் மற்றும் பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மாலை நேரத்தில் கூட்டம் இன்னும் அதிகரிக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளன.



வீட்டு வாசலில் பூக்கோலம் இட்டு, முக்கனிகளின் முகத்தில் விழித்து, புத்தாடை அணிந்து, சக மக்களுக்கும் வாழ்த்துக்கள் கூறி மகிழ்வது தான் தமிழ் புத்தாண்டு.

மக்கள் அனைவருக்கும் சிம்ப்ளிசிட்டி-யின் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...