கோவை மலுமிச்சம்பட்டி அருகே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பள்ளி அருகே திறக்க உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் பள்ளி அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.
இந்நிலையில் கடையின் வாசலை மாற்றி மீண்டும் கடையை அப்பகுதியிலேயே திறக்கும் பணி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குஞ்சாட்டியுள்ளனர். இதனால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதோடு அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், பள்ளி அருகே குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசி செல்வதாகவும், அரசு அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், மீண்டும் அங்கு டாஸ்மாக் கடை அமைக்கும் பணி தொடர்ந்தால் கடையை முற்றுகையிட்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் பள்ளி அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.
இந்நிலையில் கடையின் வாசலை மாற்றி மீண்டும் கடையை அப்பகுதியிலேயே திறக்கும் பணி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குஞ்சாட்டியுள்ளனர். இதனால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதோடு அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், பள்ளி அருகே குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசி செல்வதாகவும், அரசு அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், மீண்டும் அங்கு டாஸ்மாக் கடை அமைக்கும் பணி தொடர்ந்தால் கடையை முற்றுகையிட்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.