மலுமிச்சம்பட்டியில் பள்ளி அருகே திறக்க உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மலுமிச்சம்பட்டி அருகே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பள்ளி அருகே திறக்க உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் பள்ளி அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. 

இந்நிலையில் கடையின் வாசலை மாற்றி மீண்டும் கடையை அப்பகுதியிலேயே திறக்கும் பணி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குஞ்சாட்டியுள்ளனர். இதனால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதோடு அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும், பள்ளி அருகே குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசி செல்வதாகவும், அரசு அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், மீண்டும் அங்கு டாஸ்மாக் கடை அமைக்கும் பணி தொடர்ந்தால் கடையை முற்றுகையிட்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...