கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 54-வது வார்டுக்குட்பட்ட ராம்நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் காய்கறிக்கழிவுகள் மற்றும் குப்பைக் கழிவுகளைக் கொண்டு தரம் பிரித்து அதில் மக்கும் குப்பையின் மூலம் உரம் தயாரித்து அவர்களது வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தி வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், ராம் நகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளைக் கொண்டு மாநகராட்சி துவக்கப் பள்ளியில் உரம் தயாரிக்கும் மையத்தையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், ராம் நகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளைக் கொண்டு மாநகராட்சி துவக்கப் பள்ளியில் உரம் தயாரிக்கும் மையத்தையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.