கோவை மாநகராட்சியும், சன்லேக் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து மாநகராட்சி நகர் நல மையங்களுக்கு சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு சிறுதானியங்களான பொருட்களை வாரம் தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக 6 மாதகாலத்திற்கு இலவசமாக வழங்க திட்டமிட்டு அதற்கு "அமிர்தானியம்" என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் தொடக்கமாக இன்று (ஏப்ரல் 13) காலை 9.30 மணி அளவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் தலைமையில் எஸ்.எம்.எம்.ஹோம் நகர் நல மையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கும் 250 கிராம் திணை சிறுதானியம் பாக்கெட் சுமார் 100 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும், மாநகராட்சி ஆணையர் சிறுதானியங்களின் நன்மைகள், அதனால் உடலில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் குறித்து அங்குள்ள அனைவருக்கும் விளக்கி கூறினார்.
இவ்விழாவில் மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், எஸ்.எல்.எம்.ஹோம் மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் இளமதி மற்றும் மருத்துவர் ஹேமலதா, உதவி பொறியாளர் மகேஷ், உதவி செயற்பொறியாளர் கலாவதி, மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதன் தொடக்கமாக இன்று (ஏப்ரல் 13) காலை 9.30 மணி அளவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் தலைமையில் எஸ்.எம்.எம்.ஹோம் நகர் நல மையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கும் 250 கிராம் திணை சிறுதானியம் பாக்கெட் சுமார் 100 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும், மாநகராட்சி ஆணையர் சிறுதானியங்களின் நன்மைகள், அதனால் உடலில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் குறித்து அங்குள்ள அனைவருக்கும் விளக்கி கூறினார்.
இவ்விழாவில் மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், எஸ்.எல்.எம்.ஹோம் மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் இளமதி மற்றும் மருத்துவர் ஹேமலதா, உதவி பொறியாளர் மகேஷ், உதவி செயற்பொறியாளர் கலாவதி, மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.