கோவையில் 3 இடங்களில் பெலிக்கான் சிக்னல்களை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

கோவையில், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, சி.ஜி.டி கல்லூரி, கரும்புக்கடை சாரமேடு சந்திப்பு ஆகிய 3 இடங்களில் புதிய பெலிக்கான் சிக்னல்கள் நிறுவப்பட்டு, பாலகிருஷ்ணன் அவற்றை தொடங்கி வைத்துள்ளார்.


கோவை: சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நகரகாக கோவை மாநகர் உள்ளது. கோவை மாநகர எல்லையில் 5 தேசிய நெடுஞ்சாலைகள் போக, 57.2 கிலோ மீட்டர் நீளமுடைய 6 மாநில நெடுஞ்சாலைகளும், 77 கிலோ மீட்டர் நீளமுடைய முக்கிய மாவட்ட சாலைகளும் மற்றும் 40.7 கிலோ மீட்டர் நீளமுடைய இதர மாவட்ட சாலைகளும் உள்ளன.

போக்குவரத்து நிர்வாகம் மற்றும் சாலைப்பாதுகாப்பு குறித்து கோவை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளையும், புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக பாதசாரிகள் சுலபமாக போக்குவரத்து மிகுந்த சாலைகளை கடப்பதற்காக அவர்களே உபயோகித்துக் கொள்ளும் வகையில் பெலிக்கான் போக்குவரத்து சிக்னல்களை கோவை மாநகர போலீசார் நிறுவியுள்ளனர்.

இந்த நிலையில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம், பார்க்கேட், 100 அடி சாலையில் 1வது வீதி, சுங்கம் சந்திப்பு, வரதராஜா மில், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி, கணபதி மூன்றாம் எண் பேருந்து நிறுத்தம், துடியலூர் மற்றும் புரூக்பீல்ஸ் மால் அருகில் என 9 இடங்களில் பெலிக்கான் சிக்னல்கள்ள் நிறுவப்பட்டுள்ளன.



இதனிடயே அவினாசி சாலையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அருகே, சி.ஜ.டி, கல்லூரி அருகே மற்றும் கரும்புக்கடை சாரமேடு சந்திப்பு ஆகிய 3 இடங்களில் பெலிக்கான் சிக்னல்கள் நிறுவப்பட்டன. இவற்றை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று ஜூன்.20 தொடங்கி வைத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...