கோவை சிறுவாணி அணையில் நீர்மட்டம் கூடுதலாக 9.45 அடியாக உயர்ந்துள்ளது; தென்மேற்கு பருவமழையினால் நீர்வரத்து அதிகரிப்பு.
கோவை: கோவை மாநகரில் 26 வாா்டுகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நகரையொட்டியுள்ள கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐனவரி, பிப்ரவரி மாதங்களில் 20 அடிக்கும் அதிகமாக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், கடும் வெயில் காரணமாக மாா்ச், ஏப்ரல் மாதங்களில் 8 அடிக்கும் குறைவாக சரிந்தது. இந்நிலையில், கடந்த மே மாதத்தில் பெய்த தொடா்மழையால், அணையின் நீா்மட்டம் 10 அடிக்கும் மேல் உயா்ந்தது. அதன் பிறகு, மழை இல்லாததால், அணையின் நீா்மட்டம் மீண்டும் 9 அடிக்கும் கீழ் குறைந்தது.
இந்நிலையில், கேரளப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்துவருவதால் அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. அதன்படி ஜூன்.20 நிலவரப்படி சிறுவாணி நீா்மட்டம் 9.45 அடியாக உள்ளது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கேரளப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்துவருவதால் அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. அதன்படி ஜூன்.20 நிலவரப்படி சிறுவாணி நீா்மட்டம் 9.45 அடியாக உள்ளது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.