கோவையில் பல்வேறு வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு – சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

ஆனைமலை வட்டம், பழைய ஆழியார் அமைப்பின் கீழ் உள்ள பள்ளிவிளங்கால் வழங்கு வாய்க்காலினைப் புனரமைக்கும் பணி ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், பொள்ளாச்சி கால்வாயில் உள்ள அடுக்குத்தொடர் அமைப்பினைப் புனரமைக்கும் பணி ரூ. 4 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: 7 மாவட்டங்களில் ரூ.55 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ரூ.71.86 கோடி மதிப்பில் 10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் துரைமுருகன், பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்திட ரூ.112 கோடியே 52 இலட்சம் மதிப்பில் 13 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 25 கால்வாய்கள், வடிகால்கள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், பழைய ஆழியார் அமைப்பின் கீழ் உள்ள பள்ளிவிளங்கால் வழங்கு வாய்க்காலினைப் புனரமைக்கும் பணி ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், ஆழியார் அணையின் பொள்ளாச்சி கால்வாயில் உள்ள அடுக்குத்தொடர் அமைப்பினைப் புனரமைக்கும் பணி ரூ. 4 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டிலும், சமமட்டக்கால்வாயில் சர்க்கார்பதி மின் நிலையத்தின் அடிக்கால்வாய் மற்றும் சீராக்கி மதகினை புனரமைக்கும் பணி ரூ.4 கோடியே 73 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...