கோவை குனியமுத்தூரை சேர்ந்த ராஜா என்ற ஓவியர் மாத்திரையில் யோகா ஓவியம் வரைந்து நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கோவை: சர்வதேச யோகா தினம் இன்று (21-06-2024) கொண்டாடப்பட்டது. அதன்படி கோவையில் அனைத்து கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி இன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இருக்கு யோகா முத்திரை, எதற்கு மாத்திரை என்று கோவை குனியமுத்தூரை சேர்ந்த ராஜா என்ற ஓவியர் அண்மையில் மாத்திரையில் யோகா ஓவியம் வரைந்து நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.