கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் பணிநீக்கம் கண்ட தூய்மைப்பணியாளர்கள், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மாலை 4 மணியளவில் சட்டவிரோதமாக பணிநீக்கப்பட்ட ஊழியர்கள் பணியை மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Coimbatore: கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் சமூகநீதி தூய்மைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை 4 மணிக்கு தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் ஒப்பந்தம் மூலம் சட்டவிரோதமாக பணி நீக்கப்பட்ட 48 தூய்மைப்பணியாளர்களின் வேலையை மீட்டுத்தருவதற்காகவும், இழந்த ஊழியர்களுக்கு தொகுப்பூதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும் நடைமெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது சமூகநீதிக் கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் ந.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு பேச்சு ஆற்றினார். இதில் பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளர் வெள்ளமடை.நாகராசன், தளபதி செந்தில், ஜெயபால், பிரபாகரன், முத்துபாண்டி மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சமூகநீதிக் கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் ந.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு பேச்சு ஆற்றினார். இதில் பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளர் வெள்ளமடை.நாகராசன், தளபதி செந்தில், ஜெயபால், பிரபாகரன், முத்துபாண்டி மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.