நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், பெரிய வீதி, நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை” மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (ஜூன்.22) தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், கணக்குகள் குழு தலைவர் தீபா இளங்கோ, நகர்நல அலுவலர் மரு.பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் பாக்கியம் தனபால், தர்மராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.




உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், கணக்குகள் குழு தலைவர் தீபா இளங்கோ, நகர்நல அலுவலர் மரு.பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் பாக்கியம் தனபால், தர்மராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.