மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் கெமிக்கல் கலவையால் எழுந்த புகை - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

பிலிஷிங் பவுடர் மற்றுன் லைசால் மூலம் சுத்தம் செய்யப்பட்ட கழிவறையில் நோயாளி ஒருவர் தண்ணீர் ஊற்றியதன் விளைவாக கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டு அரசு மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென புகைமூட்டமாக காட்சி அளித்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார்.

தலைமை மருத்துவர் அருணா குமாரி விரைந்து செயல்பட்டு, தீயனைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உடனடியாக வரவழைத்தார். மேலும் சிகிச்சை பெற்று வந்த சில நோயாளிகளை உடனடியாக வெளியேற்றி, உடுமலை அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.



இதனிடையே தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்குள் நுழைந்து சிலிண்டர்கள் இருக்கும் பகுதியில் ஆய்வு செய்தனர். அதன் பின் கழிவறை பகுதியில் பார்த்த போது பிலிசிங் பவுடர், லைசால் இரண்டும் இருந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் வயிற்றுப் போக்கால் சில நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அடிக்கடி கழிவறைகளை தூய்மை பணியாளர் சுத்தம் செய்து வந்துள்ளார்.

இதை அறியாத நோயாளி ஒருவர் பிலிஷிங் பவுடர் மற்றுன் லைசால் மூலம் சுத்தம் செய்யப்பட்ட கழிவறையில் தண்ணீர் ஊற்றிய தன் விளைவாக கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டு புகை உருவாகி, மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...