கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து உடுமலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து உடுமலை-பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மது விற்பனையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக வெங்கட கிருஷ்ணா சாலையில் இருந்து வித்யாசாகர் சாலை வழியாக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமையில் ஊர்வலமாக சென்ற பாஜகவினர் உடுமலை- பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினர்க்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் வலுகட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.



இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் மலர்க்கொடி, மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.குட்டியப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு பழனிச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், நகர தலைவர் கண்ணாயிரம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...