கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

கோவையில் இருந்து கேரளாவிற்கு இரு சக்கரவானங்கள் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வழங்கல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வழங்கல் பிரிவு பறக்கும் படை அதிகாரிகள் வேளந்தாவளம் சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி வந்த மர்ம நபர்கள் அதிகாரிகள் தனிக்கை செய்வதை அறிந்ததும் பயந்து, அரிசி மூட்டைககை கீழே வீசிவிட்டு வாகனங்கள் மூலம் தப்பியோடினர். 

தொடர்ந்து,அவர்கள் வீசிச்சென்ற 400 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வழங்கல் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...