கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

இந்த ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு மொத்தம் 2330 விண்ணப்பதாரர்களும், முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 380 மாணவர்களும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்து இன்று நடைபெற்ற முதுகலை நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 11 தொகுப்பு கல்லூரிகளில் 33 முதுகலை மற்றும் 28 முனைவர் பட்டப் படிப்பை வழங்குகிறது. துணைவேந்தர் கீதாலட்சுமி மே 7, 2024 அன்று வேளாண்மை, தோட்டக்கலை. வேளாண் பொறியியல், வனவியல் மற்றும் சமூக அறிவியல் சேர்க்கைக்கான இணையதளத்தினை தொடங்கினார்.

இந்த ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு மொத்தம் 2330 விண்ணப்பதாரர்களும், முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 380 மாணவர்களும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்து 23 ஜூன் 2024 அன்று நடைபெற்ற முதுகலை நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர். 



இந்த நுழைவுத் தேர்வில் ஆத்திரப் பிரதேசம், கேரண, ஈர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், மேகாலயா, அசாம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த தேர்வு பல்கலைக்கழகத்தின் 33 தேர்வு அரங்குகள் மற்றும் விரிவுரை அரங்குகளில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 50 நிர்வாக பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டது. தேர்வு நடைபெறும் பல்வேறு அரங்குகளைக் கண்டறிய கூகுள் வரைபடத்துடன் இணைக்கப்பட்ட QR குறியீடுகள், உருவாக்கப்பட்டு

காட்டப்பட்டிருந்தது.

மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான சேர்க்கை வரும் செப்டம்பர் 2024 இல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...