மாநில திட்ட நிதியின் கீழ் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் கந்தசாமி நகர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் அபிவிருத்தி பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று துவக்கி வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.4-க்குட்பட்ட கந்தசாமி நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநில திட்ட நிதியின் கீழ் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் அபிவிருத்தி பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (24.06.2024) துவக்கி வைத்தார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் கதிர்வேலுசாமி, வட்ட கழக செயலாளர் ரங்கசாமி, கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
