தென்னாட்டு மக்களை கருப்பர்கள் என்று பேசிய பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜயை கண்டித்து திராவிடர் கழகத்தினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா? என சர்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் பாஜக எம்.பி.யான தருண் விஜயின் சர்சைக்குறிய இப்பேச்சைக் கண்டித்து இன்று திராவிடர் கழகத்தினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தருண் விஜயின் கருத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வெளிப்பாடு என்றும், இது இன எதிர்ப்பு விதமான பேச்சு என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், வட நாட்டு மக்களால் தென்னாட்டு மக்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.
கோவை தேற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவட கழகத்தைச் சேர்ந்த 40-கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா? என சர்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் பாஜக எம்.பி.யான தருண் விஜயின் சர்சைக்குறிய இப்பேச்சைக் கண்டித்து இன்று திராவிடர் கழகத்தினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தருண் விஜயின் கருத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வெளிப்பாடு என்றும், இது இன எதிர்ப்பு விதமான பேச்சு என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், வட நாட்டு மக்களால் தென்னாட்டு மக்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.
கோவை தேற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவட கழகத்தைச் சேர்ந்த 40-கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.