கிட்டாம்பாளையம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு வழங்கியுள்ள பட்டா நிலத்தை பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமிட்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
கோவை: கோவை கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் பகுதியில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது.
இந்த நிலையில் அந்த பட்டா நிலத்தை கிட்டாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டு தர வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் தலைவரிடம் இன்று ஜூன்.24 மனு அளித்தனர்.
இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் முதல்வரை நேரில் சந்திக்க செல்ல உள்ளதாக கூறினர்.
மேலும் 2019ஆம் ஆண்டிலிருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்து வருவதாகவும், அதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.
இந்த நிலையில் அந்த பட்டா நிலத்தை கிட்டாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டு தர வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் தலைவரிடம் இன்று ஜூன்.24 மனு அளித்தனர்.
இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் முதல்வரை நேரில் சந்திக்க செல்ல உள்ளதாக கூறினர்.
மேலும் 2019ஆம் ஆண்டிலிருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்து வருவதாகவும், அதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.