நாளை (25.06.2024) நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணத்தால் நடைபெறாது என்று கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10 மணி முதல் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த நிலையில் நாளை (25.06.2024) இந்த கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணத்தால் நடைபெறாது என கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று ஜூன்.24 தெரிவித்துள்ளார்.