45 வயதை கடந்து விட்டதாக கூறி 48 தொழிலாளர்களை எந்தவித முன்னறிவிப்பு இன்றி பணியில் இருந்து ஒப்பந்தம் நிறுவனத்தினர் நீக்கி விட்டனர். இதனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக 48 நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தனர். பணிபுரியும் பணியாளர்கள் பட்டியல் மற்றும் பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தோர் குடும்பத்தை சார்ந்தவர்கள். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த குறைந்தபட்ச கூலி ரூ. 745 வழங்கப்படுகிறது.
ஆனால் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் வெறும் ரூ.546 மட்டுமே கூலி வழங்கி வந்தது. இது குறித்து ஒப்பந்தம் நிறுவனத்திடம் கேட்டபோது எந்தவித காரணமும், அறிவிப்பும் இன்றி 45 வயதை கடந்து விட்டதாக கூறி 48 தொழிலாளர்களை எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றி பணியில் இருந்து நீக்கி விட்டனர்.
கூலி, பணிக்கொடை, ESI, PF உள்ளிட்டு பணப் பயன்கள் தொகை வழங்காமல் காரணமின்றி திடீரென பணியில் இருந்து நீக்கிவிட்டதால் வீட்டு வாடகை செலுத்த முடியாமலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி விட்டனர். அதனை ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் இன்று ஜூன்.24 புகார் மனு அளித்தனர்.
ஆனால் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் வெறும் ரூ.546 மட்டுமே கூலி வழங்கி வந்தது. இது குறித்து ஒப்பந்தம் நிறுவனத்திடம் கேட்டபோது எந்தவித காரணமும், அறிவிப்பும் இன்றி 45 வயதை கடந்து விட்டதாக கூறி 48 தொழிலாளர்களை எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றி பணியில் இருந்து நீக்கி விட்டனர்.
கூலி, பணிக்கொடை, ESI, PF உள்ளிட்டு பணப் பயன்கள் தொகை வழங்காமல் காரணமின்றி திடீரென பணியில் இருந்து நீக்கிவிட்டதால் வீட்டு வாடகை செலுத்த முடியாமலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி விட்டனர். அதனை ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் இன்று ஜூன்.24 புகார் மனு அளித்தனர்.