கோவை விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள் பணி நீக்கம் – பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் புகார்

45 வயதை கடந்து விட்டதாக கூறி 48 தொழிலாளர்களை எந்தவித முன்னறிவிப்பு இன்றி பணியில் இருந்து ஒப்பந்தம் நிறுவனத்தினர் நீக்கி விட்டனர். இதனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக 48 நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தனர். பணிபுரியும் பணியாளர்கள் பட்டியல் மற்றும் பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தோர் குடும்பத்தை சார்ந்தவர்கள். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த குறைந்தபட்ச கூலி ரூ. 745 வழங்கப்படுகிறது.

ஆனால் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் வெறும் ரூ.546 மட்டுமே கூலி வழங்கி வந்தது. இது குறித்து ஒப்பந்தம் நிறுவனத்திடம் கேட்டபோது எந்தவித காரணமும், அறிவிப்பும் இன்றி 45 வயதை கடந்து விட்டதாக கூறி 48 தொழிலாளர்களை எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றி பணியில் இருந்து நீக்கி விட்டனர்.

கூலி, பணிக்கொடை, ESI, PF உள்ளிட்டு பணப் பயன்கள் தொகை வழங்காமல் காரணமின்றி திடீரென பணியில் இருந்து நீக்கிவிட்டதால் வீட்டு வாடகை செலுத்த முடியாமலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி விட்டனர். அதனை ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் இன்று ஜூன்.24 புகார் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...