கோவை விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள் பணி நீக்கம் – பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் புகார்

45 வயதை கடந்து விட்டதாக கூறி 48 தொழிலாளர்களை எந்தவித முன்னறிவிப்பு இன்றி பணியில் இருந்து ஒப்பந்தம் நிறுவனத்தினர் நீக்கி விட்டனர். இதனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக 48 நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தனர். பணிபுரியும் பணியாளர்கள் பட்டியல் மற்றும் பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தோர் குடும்பத்தை சார்ந்தவர்கள். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த குறைந்தபட்ச கூலி ரூ. 745 வழங்கப்படுகிறது.

ஆனால் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் வெறும் ரூ.546 மட்டுமே கூலி வழங்கி வந்தது. இது குறித்து ஒப்பந்தம் நிறுவனத்திடம் கேட்டபோது எந்தவித காரணமும், அறிவிப்பும் இன்றி 45 வயதை கடந்து விட்டதாக கூறி 48 தொழிலாளர்களை எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றி பணியில் இருந்து நீக்கி விட்டனர்.

கூலி, பணிக்கொடை, ESI, PF உள்ளிட்டு பணப் பயன்கள் தொகை வழங்காமல் காரணமின்றி திடீரென பணியில் இருந்து நீக்கிவிட்டதால் வீட்டு வாடகை செலுத்த முடியாமலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி விட்டனர். அதனை ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் இன்று ஜூன்.24 புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...