சின்னியம்பாளையம் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கறுப்புகொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்



கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கறுப்புகொடி கட்டி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் டாஸ்மாக கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 



அதனொரு பகுதியாக கோவையை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் கடையை விவசாய நிலத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு கட்டிடம் கட்டும் பணிகளும் நிறைவடைந்துள்ளது. 

இதற்கு அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் எதிர்ப்புதெரிவித்து வந்த நிலையிலும் அதற்கான பணிகளை அதிகாரிகள் கைவிடவில்லை. இதனால் அதிர்ப்தி அடைந்த கிராம மக்கள் வீடுகள் மற்றும் கடைகள், தொழிற்சாலைகளில் கறுப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் இப்பகுதியில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும், ஏற்கனவே தெரு விளக்குகள் இல்லாததால் இந்த பகுதியை கடக்க பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் மதுக்கடை அமைத்தால் இந்த பகுதியை கடக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் உட்பட அனைவருக்கும் இடையூறாக அமையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களுடைய எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அமைக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...