ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க ஒப்புதல் - கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நன்றி

ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர் நிலத்தில், "சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.



கோவை: தமிழ்நாடு முதலமைச்சர், திமுக கழகத் தலைவர் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர்நிலத்தில், "சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் வழங்கியமைக்கும், கோவையில் அறிவியல் மேதை அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாயில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், இளைஞர்களின் இதய ஏந்தல், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் நன்றி என்று கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பிலும், கோவை மாவட்ட பொதுமக்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் சார்பில் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் இன்று வீடியோ ஒன்றை ஜூன்.25 பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...