கோவையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காட்டூர் மாரியம்மனுக்கு இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தால் ஆலங்காரம் செய்யப்பட்டிருந்ததை ஆயிரக்கணகான பொதுமக்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

தமிழ்ப் புத்தாண்டு நாளான சித்திரை முதல் நாள் கனிகாணல் நிகழ்ச்சி கோவில்களிலும் வீடுகளிலும் கனிகளைஅலங்கரித்து வைப்பர். வீடுகளில் பூஜையறையில் வாழை, கொய்யா, மாதுளை முதலிய கனிகளையும் காய்கறிகளையும்வாழையிலையில் வைத்து அதிகாலையில் எழுந்ததும் பூஜையறைக்குச் சென்று அவற்றின் மேல் கண்விழிப்பர்.கோயில்களிலும் கனிகாணுதல் நிகழ்ச்சியும் கைநீட்டமும் நடைபெறும்.

இந்நிலையில் கோவை காட்டூரில் அமைந்திருக்கும் மாரியம்மனுக்கு 2000ஆம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான பண அலங்காரம் மற்றும் தங்கம் , வைரத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அம்மனை ஆயிரக்கணகான மக்கள் தரிசித்து வழிபட்டனர்.
புத்தாண்டு தினத்தில் மக்கள் பணம் மற்றும் நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அம்மனை தரிசனம் செய்யும் போது அனைத்தும் வளங்களும் கிடைக்கும் . மேலும் கோவிலின் முகப்பில் காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கோபுரம் தமிழ் புத்தாண்டில் வறட்சி நீங்கி வளம் பெரும் விதமாக மக்கள் பெறும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது