மத்திய அரசின் முப்பெரும் சட்டத்தின் பெயர் மாற்ற நடவடிக்கையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் புரோசிஜர் கோர்டு மற்றும் இந்திய ஆதாரச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றியுள்ளதை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் புரோசிஜர் கோர்டு மற்றும் இந்திய ஆதாரச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை அண்மையில் சமஸ்கிருதத்தில் மாற்றியுள்ளனர். இந்த பெயர்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலாக உள்ள நிலையில், நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.



இந்நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஜூன்.25 ஈடுபட்டனர். அப்போது சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்களை மாற்றி பாசிச வடிவாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதாகவும், பல்வேறு எதிர்ப்புகளை மீறியே இதனை ஒன்றிய அமல்படுத்துவதாகவும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், உடனடியாக இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...