ராயர்பாளையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் மற்றும் பேக்கை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம்-திருப்பூர் சாலை ராயர்பாளையத்தில் கண்காட்சி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்காட்சியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அருகே உள்ள கடையின் மேற்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் 3 செல்போன் மற்றும் பேக் ஒன்றை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்று சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் எழுந்து பார்த்த போது செல்போன் மற்றும் பேக் திருடு போனது தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாரிடம் கண்காட்சியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் புகாரளித்துள்ளர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்ம நபர் செல்போன் மற்றும் பேக்கை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் எழுந்து பார்த்த போது செல்போன் மற்றும் பேக் திருடு போனது தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாரிடம் கண்காட்சியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் புகாரளித்துள்ளர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்ம நபர் செல்போன் மற்றும் பேக்கை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.