குடிநீர் வழங்கக்கோரி பல்லடம் தாராபுரம் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்


திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சுமார் 150 மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படாததால் இன்று காலை பல்லடம் தாராபுரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காததாலும் குடிநீர் சப்ளை 18 நாட்கள் ஒரு முறை வருவதாகவும். உப்பு தண்ணீர் சப்பளை இரண்டு மணிநேரம் மட்டும் வருகிறது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் பஞ்சாயத்து உறுப்பினர்களை சந்தித்து பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அரசாங்க அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.



உள்ளாட்சி தேர்தல்களில் தாமதம் காரணமாக இந்த  பகுதி மக்களின்  நிலைகளை கண்டுகொள்ள கவுன்சிலர் இல்லாததாலும், இதனால் அதிகாரிகளும் மக்கள் பிரச்சனைகளுக்கு முறையான பதில்களும் வழங்காததாலும் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்குதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. அதிகாரிகள் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...