டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்திக்காத பிரதமர் மோடியை கண்டித்து, கோவையில் பாடை சுமந்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கைது செய்யப்பட்டனர்.

வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை இரயில் நிலையம் முன்பாக டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்திக்காத பிரதமர் மோடியை கண்டித்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி, ஒரு மாணவரை பாடை போல எடுத்து வந்து போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக குற்றம்சாட்டிய மாணவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
மேலும் விவசாயிகள் வங்கிகடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதையடுத்து இரயில் நிலையத்திற்குள் சென்று இரயில் மறியலில் ஈடுபட முயன்ற 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை இரயில் நிலையம் முன்பாக டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்திக்காத பிரதமர் மோடியை கண்டித்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி, ஒரு மாணவரை பாடை போல எடுத்து வந்து போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக குற்றம்சாட்டிய மாணவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
மேலும் விவசாயிகள் வங்கிகடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதையடுத்து இரயில் நிலையத்திற்குள் சென்று இரயில் மறியலில் ஈடுபட முயன்ற 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.