கோவை மாநகராட்சியை கண்டித்து அதிகார குரல் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களின் எட்டு மாத இஎஸ்ஐ மற்றும் பிஎப் பணத்தை செலுத்தாத சதர்ன் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் தினக்கூலி தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுனர்கள், துலக்குனர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் அதிகார குரல் கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாடா பாத் அருகே, 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2 மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாநகாராட்சியை கண்டித்து கோசங்களை எழுப்பினர். அனைத்து தொழிலாளர்களின் எட்டு மாத இஎஸ்ஐ மற்றும் பிஎப் பணத்தை செலுத்தாத சதர்ன் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

மாநகராட்சி ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும். பணிச்சுமையால் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணமாக 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...