மதுரையை தொடர்ந்து கோவையிலும் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவை: மதுரையை தொடர்ந்து கோவையிலும் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக முன்னேறி இருக்கிறது என இன்று (ஜூன்.27) சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் கோவையில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.