கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைக்காததை கண்டித்து அப்பகுதியில் உள்ள ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடிஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் மேம்பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. மேலும் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு வாகனங்கள் செல்ல தனியாக பாதை ஏற்படுத்தாமல் ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதிகள் வழியாக இயக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து இன்று பீளமேடு முருகன் நகர், ஹட்கோ காலனி ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடிகளில் கருப்பு கொடி ஏற்றி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் சுரங்கபாதை அமைத்து தர வேண்டும் எனவும், பீளமேடு ரயில் நிலையத்தில் இருந்து கனரக வாகனங்களை குடியிருப்பு பகுதிகள் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளதை ரயில்வே நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் கைவிட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.
கோவை பீளமேடு ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் மேம்பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. மேலும் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு வாகனங்கள் செல்ல தனியாக பாதை ஏற்படுத்தாமல் ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதிகள் வழியாக இயக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து இன்று பீளமேடு முருகன் நகர், ஹட்கோ காலனி ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடிகளில் கருப்பு கொடி ஏற்றி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் சுரங்கபாதை அமைத்து தர வேண்டும் எனவும், பீளமேடு ரயில் நிலையத்தில் இருந்து கனரக வாகனங்களை குடியிருப்பு பகுதிகள் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளதை ரயில்வே நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் கைவிட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.