கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா

தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி, கௌரவ கர்னல் பதவி சின்னத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு வழங்கினார்.


கோவை: தேசிய மாணவர் படை சார்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமிக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா இன்று ஜூன்.27 பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதன் இணைப்பு, மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தேசிய மாணவர் படையில் முனைவர் கீதாலட்சுமி ஆற்றிய தொண்டை போற்றும் விதமாக இவ்விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி கலந்துகொண்டு கௌரவ கர்னல் பதவி சின்னத்தை துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 14 ஆம் ஆண்டு துணைவேந்தராக நான் இந்த பெருமையை பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த பதவியை பெரும் நான்காவது துணைவேந்தராக நான் உள்ளதாகவும், மேலும் இந்தியாவிலேயே அதிக கவுரவ பதவி சின்னத்தை பெரும் முதல் பெண்ணாக நான் இருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த பதவிக்கு ஏற்ப தன்னால் இந்திய மாணவர்களுக்கு என்னென்ன நற்பண்புகளை பறைசாற்ற முடியுமோ நிச்சயம் அதை அவர்களுக்காக செய்வேன் என்று உறுதி அளித்தார்.

Newsletter

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...