கோவையில் நில அளவைத் துறையின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பட்டா மாறுதலில் மோசடி - 2 பேர் கைது

கோவை நில அளவைத் துறை அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் பட்டா மாறுதலுக்கான பயனாளா் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி பட்டா மாறுதலில் மோசடி செய்த இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் தெற்கு வட்ட நகர நில அளவை பதிவேடு துறையில் சார் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் சுரேஷ்குமார் (39). இவா், மாநகர சைபா் கிரைம் போலீஸில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதில், கோவை நில அளவைத் துறை அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் பட்டா மாறுதலுக்கான பயனாளா் ஐடி மற்றும் கடவுச்சொல்லை அனுமதியின்றி பயன்படுத்தி பட்டா மாறுதல் உள்ளிட்ட மோசடிகளில் சிலா் ஈடுபட்டுள்ளனா்.

அவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில், மாநகர சைபா் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் செளரிபாளையத்தைச் சோ்ந்த அருண் பிரதாப் (43), ஆட்சியா் அலுவலகத்தில் கணினிப் பிரிவில் தாற்காலிக ஊழியராகப் பணியாற்றும் பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மணிகண்டன் (34) ஆகியோரை போலீஸார் நேற்று ஜூன்.27 கைது செய்தனா்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...