உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில் இரத்த தானம் முகாம்

வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில், மத்திய பண்ணை வளாகத்தில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்தனர்.


கோவை: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் தேதி அன்று உலக இரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது. பொள்ளாச்சியில் உள்ள வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில், மத்திய பண்ணை வளாகத்தில், ஜூன் 14ம் தேதி அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.



இந்த முகாமை, வாணவராயர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் G.தாமோதரன் மற்றும் முனைவர் N.நவீன், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்தனர்.



இம்முகாமில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இதர மாணவர்களில் சுமார் 50 பேர் மற்றும் கல்லூரியின் 10 பேராசிரியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.



இதன் மூலம் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்வதோடு சமூக நலனில் தங்களுக்கு உள்ள பங்களிப்பையும் பதிவு செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...