பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் TN GREEN CREATORS குழு அமைப்பினர் மற்றும் கலை அறிவியல் கல்லூரி NSS மாணவ, மாணவியர்கள் சார்பாக 600 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.


கோவை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு குறிப்பிடத்தக்க முயற்சியாக, பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அதன் வளாகத்தில் TN GREEN CREATORS குழு அமைப்பினர் மற்றும் கலை அறிவியல் கல்லூரி NSS மாணவ, மாணவியர்கள் சார்பாக 600 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.



இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சமூக ஆர்வலர்கள் செந்தில்குமார், அரிமா.ஸ்ரீமான் சுந்தரம், Loin.நெடுமாறன், Loin.தியாகராஜன், வெங்கடேஷ், S.பாபு, தமிழ்நாடு காவல் துறை, TN CREATOR MEMBERS லோகேஸ்ராம், நிர்மல், அஷ்வின், சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்கும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும் மரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நிகழ்வின் நோக்கமாகும். விழாவில் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் நாட்டு மரக் கன்றுகள் நடப்பட்டன.

இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் உணர்வை வளர்ப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்கை சார் ஆட்சியர் வலியுறுத்தினார். நமது இயற்கை வளங்களை பாதுகாக்க கூட்டு முயற்சியின் அவசியத்தை டிஎஸ்பி எடுத்துரைத்தார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் உ.சுமதி வரவேற்புரை நிகழ்த்தினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...