நவீன வசதியுடன் கூடிய புதிய விளையாட்டு விடுதிக்கான இடம் தேர்வு குறித்து நேருஉள் விளையாட்டரங்கம் அருகில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆய்வு நடத்தினார்.
கோவை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற பேரவை மானிய கோரிக்கையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவீன வசதியுடன் கூடிய புதிய விளையாட்டு விடுதி அமைக்கப்படும் என்ற அறிவிப்பின்படி, அதற்கான இடம் தேர்வு குறித்து கோயம்புத்தூர் மாவட்டம் நேரு உள் விளையாட்டரங்கம் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி இன்று (28.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர்கள் அருணா (கோயம்புத்தூர்), ரகுகுமார் (திருப்பூர்), வட்டாட்சியர் மணிவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் இருந்தனர்.
அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர்கள் அருணா (கோயம்புத்தூர்), ரகுகுமார் (திருப்பூர்), வட்டாட்சியர் மணிவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் இருந்தனர்.