கோவை குறிச்சி குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் படையினர்

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியிலுள்ள தமிழ்நாடு 4-வது சிறப்பு காவல் படையினர் இன்று காலை குறிச்சி குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் கோவை குறிச்சி குளம் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது.



வரும் பருவமழை காலத்திலாவது இக்குளத்தில் நீர்வரத்து அதிகரிக்கும் நோக்கத்தில் இன்று காலை 6 முதல் 10 மணி வரை குளத்தை சுத்தப்படுத்தும் பணியானது 4 வது சிறப்பு காவல் படை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

சுமார் 120 காவலர்கள் குறிச்சி குளத்தின் உட்பகுதியில் உள்ள கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அகற்றினர்.

மேலும், குளத்தின் உட்பகுதியில் இருந்த மேடான பகுதிகளை இயந்திரம் மூலம் சமப்படுத்தியும், குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் உள்ள உடைப்புகள் மற்றும் புதர்கள் போன்றவற்றை அகற்றியும், குளத்தின் கரை பகுதியை வலுப்படுத்தியும் குறிச்சி குளத்தை சீரமைத்தனர்.

தொடர்ந்து, குறிச்சி குளம் மீட்பு குழுவின் நிர்வாகிகள் சாமிநாதன் உள்ளிட்டோர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

இதே போன்று உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் குளங்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் அப்பகுதியில் புதர்மண்டிக் கிடந்த வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...