கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியிலுள்ள தமிழ்நாடு 4-வது சிறப்பு காவல் படையினர் இன்று காலை குறிச்சி குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் கோவை குறிச்சி குளம் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது.

வரும் பருவமழை காலத்திலாவது இக்குளத்தில் நீர்வரத்து அதிகரிக்கும் நோக்கத்தில் இன்று காலை 6 முதல் 10 மணி வரை குளத்தை சுத்தப்படுத்தும் பணியானது 4 வது சிறப்பு காவல் படை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
சுமார் 120 காவலர்கள் குறிச்சி குளத்தின் உட்பகுதியில் உள்ள கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அகற்றினர்.
மேலும், குளத்தின் உட்பகுதியில் இருந்த மேடான பகுதிகளை இயந்திரம் மூலம் சமப்படுத்தியும், குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் உள்ள உடைப்புகள் மற்றும் புதர்கள் போன்றவற்றை அகற்றியும், குளத்தின் கரை பகுதியை வலுப்படுத்தியும் குறிச்சி குளத்தை சீரமைத்தனர்.
தொடர்ந்து, குறிச்சி குளம் மீட்பு குழுவின் நிர்வாகிகள் சாமிநாதன் உள்ளிட்டோர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
இதே போன்று உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் குளங்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் அப்பகுதியில் புதர்மண்டிக் கிடந்த வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் கோவை குறிச்சி குளம் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது.

வரும் பருவமழை காலத்திலாவது இக்குளத்தில் நீர்வரத்து அதிகரிக்கும் நோக்கத்தில் இன்று காலை 6 முதல் 10 மணி வரை குளத்தை சுத்தப்படுத்தும் பணியானது 4 வது சிறப்பு காவல் படை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
சுமார் 120 காவலர்கள் குறிச்சி குளத்தின் உட்பகுதியில் உள்ள கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அகற்றினர்.
மேலும், குளத்தின் உட்பகுதியில் இருந்த மேடான பகுதிகளை இயந்திரம் மூலம் சமப்படுத்தியும், குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் உள்ள உடைப்புகள் மற்றும் புதர்கள் போன்றவற்றை அகற்றியும், குளத்தின் கரை பகுதியை வலுப்படுத்தியும் குறிச்சி குளத்தை சீரமைத்தனர்.
தொடர்ந்து, குறிச்சி குளம் மீட்பு குழுவின் நிர்வாகிகள் சாமிநாதன் உள்ளிட்டோர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
இதே போன்று உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் குளங்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் அப்பகுதியில் புதர்மண்டிக் கிடந்த வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.