உதகையை தூய்மைபடுத்திய காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து தூய்மை பாரதம் என்ற இலக்கை அடையும் வகையில் தூய்மை பணிகளை மேற்கொண்டது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில் 

துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள் மணிகண்டன், பாஸ்கரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த தூய்மை பணியின் போது, தாவிரவியல் பூங்கா சாலை, என்.சி.எம்.எஸ் பகுதி, கோத்தகிரி, குன்னூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பி.1, ஜி1, புது மந்து, மஞ்சூர் உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் 200 பேரும், 100 நகராட்சி பணியாளர்களும் பங்கேற்றனர். மேலும், 10 நகராட்சி வாகனங்களும் இப்பணிக்கு ஈடுபடுத்தப்பட்டன.



நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் உதகையின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து நடத்திய இந்த தூய்மை பணி மக்களிடமும் சுற்றுலா பயணிகளிடமும் பெரும் வரவேற்பை  பெற்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...