கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் கோவையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.
இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த இரு வாரங்களாக வெள்ளலூர் குளத்தில் களப்பணியில் ஈடுபட்டு சீமைக்கருவேள மரங்களை அகற்றினர். தொடர்ந்து, கடந்த வாரம் ஆத்துப்பாளம் அருகே வெள்ளலூர் தடுப்பணையில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து லாரிகள் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றினர்.

தொடர்ந்து, இந்த வாரம் தூர்வாரும் பணியாக இன்றும் வெள்ளலூர் குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.மணிகண்டன் கூறுகையில், கோவையில் வரலாற்று சிறப்புமிக்க குளங்களில் ஒன்று வெள்ளலூர் குளம். இக்குளத்தினை சமீபகாலமாக சரிவர பராமரிக்காததால் தற்போது பயனற்று கிடக்கிறது. மேலும், தொழிற்சாலைக் கழிவுகள், குடியிருப்புக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்களால் வெள்ளலூர் குளம் சிதலமடைந்துள்ளது.
இதனை கடந்த இரு வாரங்கள் தூர்வாரி சீமைக்கருவேல மரம், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினோம். தொடர்ந்து, இன்று மூன்றாவது வாரமாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஒன்றிணைந்து ஏராளமான கழிவுப் பொருட்களை அகற்றியுள்ளோம். மேலும், இக்குளத்திற்கு நீர் வரும் வாய்க்கால்கள் முழுவதும் கழிவுப் பொருட்களால் அடைபட்டுள்ளது. அதனையும் தூர்வாரி சுத்தம் செய்தோம்.

தொடர்ந்து, கோவையில் சிதலமற்றுள்ள குளங்கள், நீர்நிலைகளில் தூர்வாரும் பணி நடைபெறும். இதனால், வரும் மழைக்காலத்தில் நீர் முழுவதுமாக சேமிக்கப்படும்.
மேலும், பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நீர்நிலைகளில் கொட்டுவதை நிறுத்தினால் மட்டுமே முழுமையாக நீர்நிலைகளை பாதுகாக்க முடியும்' என்றார்.

இன்று நடைபெற்ற வெள்ளலூர் குளம் தூர்வாரும் பணியில் அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் என 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த இரு வாரங்களாக வெள்ளலூர் குளத்தில் களப்பணியில் ஈடுபட்டு சீமைக்கருவேள மரங்களை அகற்றினர். தொடர்ந்து, கடந்த வாரம் ஆத்துப்பாளம் அருகே வெள்ளலூர் தடுப்பணையில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து லாரிகள் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றினர்.

தொடர்ந்து, இந்த வாரம் தூர்வாரும் பணியாக இன்றும் வெள்ளலூர் குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.மணிகண்டன் கூறுகையில், கோவையில் வரலாற்று சிறப்புமிக்க குளங்களில் ஒன்று வெள்ளலூர் குளம். இக்குளத்தினை சமீபகாலமாக சரிவர பராமரிக்காததால் தற்போது பயனற்று கிடக்கிறது. மேலும், தொழிற்சாலைக் கழிவுகள், குடியிருப்புக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்களால் வெள்ளலூர் குளம் சிதலமடைந்துள்ளது.
இதனை கடந்த இரு வாரங்கள் தூர்வாரி சீமைக்கருவேல மரம், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினோம். தொடர்ந்து, இன்று மூன்றாவது வாரமாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஒன்றிணைந்து ஏராளமான கழிவுப் பொருட்களை அகற்றியுள்ளோம். மேலும், இக்குளத்திற்கு நீர் வரும் வாய்க்கால்கள் முழுவதும் கழிவுப் பொருட்களால் அடைபட்டுள்ளது. அதனையும் தூர்வாரி சுத்தம் செய்தோம்.

தொடர்ந்து, கோவையில் சிதலமற்றுள்ள குளங்கள், நீர்நிலைகளில் தூர்வாரும் பணி நடைபெறும். இதனால், வரும் மழைக்காலத்தில் நீர் முழுவதுமாக சேமிக்கப்படும்.
மேலும், பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நீர்நிலைகளில் கொட்டுவதை நிறுத்தினால் மட்டுமே முழுமையாக நீர்நிலைகளை பாதுகாக்க முடியும்' என்றார்.

இன்று நடைபெற்ற வெள்ளலூர் குளம் தூர்வாரும் பணியில் அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் என 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
